நண்பனின் தங்கையை காதலித்த வாலிபர்.. ஆற்றுப்பகுதியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.!!
Karnataka youngster murder due to love problem
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா மாவட்டத்தில் இருக்கும் கார்வார் புறநகர் பகுதியை சார்ந்தவர் அனோஜ் நாயக் (வயது 30). இவரது நண்பர் சூரஜ். இருவரும் மீன்வர்களாக இருந்து வந்த நிலையில், நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சூரனின் தங்கையை அனோஜ் நாயக் காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த சூரஜ் கண்டிக்கவே, இதனை ஏற்றுக்கொள்ளாத அனோஜ் அடிக்கடி காதலியை தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதனையடுத்து நண்பனை கொலை செய்ய சூரஜ் திட்டமிட்டு, அப்பகுதியை சார்ந்த வினய் நாயக், சாகர், ரூபேஷ் ஆகியோரை தன்னுடன் சேர்த்துள்ளார்.
பின்னர் இவர்கள் நால்வரும் அனோஜை அங்குள்ள காளி ஆற்றுப்படுகைக்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை ஆற்றில் வீசி தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த கொலை காதல் விவகாரத்தில் அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சூரஜ் உட்பட நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka youngster murder due to love problem