டிரம்முக்குள் பெண்ணின் சடலம் | போலீசார் விசாரணையில் திடுக்கிடும் கொலைக்கான பின்னணி! - Seithipunal
Seithipunal



கர்நாடக : டிரம்முக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பைப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் மீட்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளிகள் யார்?கொலைக்கான காரணம் என்ன? போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் உயிரிழந்த பெண் தமன்னா என்பது தெரியவந்தது.

மேலும், தமன்னாவின் சடலத்தை கொலையாளிகள் ஆட்டோவில் வந்து ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து மூவரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் நடத்திய கிடுப்புடி விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக தமன்னா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

கணவன் அஃப்ரோஜை விவாகரத்து செய்துவிட்டு, அவரது உறவினர்களில் ஒருவரான இன்டிகாப்பை திருமணம் செய்து கொண்டுள்ளார் தமன்னா.

பின்னர் தமன்னாவை மதிய விருந்துக்கு அழைத்து, அவரை இந்த மூன்று பேரும் சேர்ந்து கொன்றுள்ளனர். பின்னர் நள்ளிரவுக்குப் பின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

கொலைக்கான கரணம் குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka lady mystery murder case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->