தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம்: 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் வாங்கியுள்ள கர்நாடக அரசு..!
Karnataka government withdraws 12 hour work plan
கர்நாடகா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இதற்காக அம் மாநிலத்தின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025-ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது. தற்போது கர்நாடகாவில் நாள் ஒன்றுக்கு மேலதிக நேரம் சேர்த்து 10 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதி அமலில் உள்ளது.
குறித்த சட்டத்தில் திருத்தம் செய்து 12 மணி நேரம் வேலை பார்க்கலாம் என மசோதாவை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டது. குறித்த சட்டத்தை இதை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் பணி 02 ஷிப்டு முறைக்கு வழிவகுக்கும் என்றும், ஊழியர்களின் எண்ணிக்கையில் 03-இல் ஒரு பங்கை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இதனை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கேஐடியு வலியுறுத்தியது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து, கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இது தொடர்ப்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர்அறிவித்துள்ளார். இதற்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka government withdraws 12 hour work plan