உன் பொண்டாட்டி எனக்குதான்.. மனைவியின் கள்ளக்காதலனை கதறவிட்ட கணவன்.. பிளேடு, கத்தியால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் மைலப்பனஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 

வெங்கடேசனின் மனைவிக்கும், இதே பகுதியை சார்ந்த அர்ஜுன் (வயது 28) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து வெங்கடேஷ் தினமும் பணிக்கு சென்றதும், கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் வெங்கடேசனுக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலை கைவிட முடியாது என அர்ஜுன் மறுப்பு தெரிவித்து மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அர்ஜுனை சந்தித்து பேசிய வெங்கடேஷ் கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடக்கூறி சொல்லவே அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், கையில் கொண்டு வந்த கத்தி மற்றும் பிளேடால் அர்ஜுனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அர்ஜுனை மீட்ட அக்கம் பக்கத்தினர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிக்கபள்ளாபூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Chikkaballapur Illegal Affair Man Murder Attempt by Real Husband of Woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->