மகனைக் கொன்று பையில் அடைத்த தலைமை நிர்வாகி: காவல் நிலையத்தில் தாய் அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 4 வயது மகனை தாய்க் கொலை செய்து பையில் அடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனரும் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் சுசனா சேத் (வயது 39). 

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவாவில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் தனது 4 வயது மகனுடன் அரை எடுத்து தங்கி திங்கட்கிழமை காலை காலி செய்துவிட்டு பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் பராமரிப்பு ஊழியர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றபோது அரை முழுவதும் ரத்தக்கரைகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த நிர்வாகத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி கண்காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தபோது சுசனா தனது மகனுடன் அறைக்கு வந்ததும் திரும்பிச் செல்லும் போது தனியாக சென்றுள்ளதும் பதிவாகி இருந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுசனாவை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவருடன் இருந்து பிரிந்த காரணத்தினால் மகனை கொலை செய்து பையில் அடைத்து கொண்டு வந்ததாக சுசனா வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் சூசனாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka chief executive killed son 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->