கர்நாடகா: பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் பலி.. 26 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களை ஹுப்ளி நகரிலுள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka bus and lorry accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->