நாடக காதலனிடம் சிக்கிய சிறுமி., 6 மாதமாக 10 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பலியால் வன்கொடுமை.! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை காதல் போர்வையில் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் : கடப்பா மாவட்டத்துக்குப்பட்ட இஸ்லாம்புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த செம்பு என்பவன் காதலிப்பதாக கூறி, சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து உள்ளான்.

மேலும், அதனை வீடியோவாக எடுத்த அவன், வீடியோவை சிறுமியிடம் காட்டி நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க வேண்டுமெனவும், இல்லையெனில் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

மிரட்டலுக்கு பயந்த சிறுமியை, தனது நண்பர்கள் பலரிடம் விட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் செம்பு. கடந்த 6 மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வந்த நிலையில், கடந்த 4ந்தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, உடனடியாக பொதட்டூர் பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரே புகாரை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. 

சிறுமி ஒருவர் 3 மாத கர்ப்பமாக இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பரவவே, கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவரின் உத்தரவு பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadappa 15 years old girl abused


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->