கோழைத்தனமான தாக்குதல் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


"டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் தமிழக மாணவர்களை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது" என்று, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில்  இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள்  தாக்கப்பட்டிருக்கின்றனர்.  தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ்  உள்ளிட்ட தலைவர்களின்  உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன செய்தியில், "பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை கோழைத்தனமாக தாக்கி, பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏபிவிபி அமைப்பினரின் செயல் கண்டனத்துக்குரியது.

அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பாஜக பாஜகவுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது, தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடுவதை டெல்லி காவல் துறையும், பல்கலைக்கழக காவலர்களும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கண்டன செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JNU TN Students attack Issue Cm Condemn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->