ஜே.இ.இ தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்குள்ள பயிற்சி மையங்களில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கோட்டாவில் ஜே.இ.இ.க்கு தயாராகி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் மாணவரின் அறையில் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "என்னால் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jee student sucide in rajasthan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->