ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து! பலியானோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்திலுள்ள பாபா வைத்தியநாத் கோயிலின் இரு ரோப் கார்கள் அந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.

தேவ்கர் நகரின் பிரபலமான பாபா வைத்தியநாத் இருந்து திரீகுட் மலைப் பகுதியில் இரண்டு ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 100 அடி உயரத்தில் அனைத்து ரோப் கார்களும் நடுவழியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. தகவலறிந்து வந்த விமான படையினர் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

இதில் 3 பேர் பலியாகினர். இந்த ரோப் கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jarkhand rope car accident 5 lakh compensation


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->