#BigBreaking: பாக். இராணுவம் அத்துமீறல்.. 3 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம்..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வந்த நிலையில், இந்த தாக்குதலில் தற்போது மூணு பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 

இதனைப்போன்று 3 அப்பாவி பொதுமக்களும் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் கொட்டத்தை ஒடுக்க பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Pakistan Border Poonch Pak Army Ceasefire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->