காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம்.. ஆசிட் வீசி அழிக்கப்பட்ட அடையாளம்.. உத்திரபிரதேசத்தில் மீண்டும் பேரதிர்ச்சி.!!
in uttarpredesh girl murder and Identified cleared by acid
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பஹாரை மாவட்டத்திலிருக்கும் கடார்னியாகட் உயிரியல் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில், பெண்ணின் உடல் ஆசிட் போன்ற வேதியல் பொருட்களின் மூலமாக உடல் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்துள்ளது. இதனை கண்டு காவல் துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிட் வீசி அழிக்கப்பட்டு அவரின் அடையாளம் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் யார் என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பெண் தொடர்பான விஷயம் கிடைத்த பின்னர் எதற்க்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? என்பது தெரியவரும். இதனைப்போன்று பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனையின் அறிக்கையில் வெளியாகும். இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in uttarpredesh girl murder and Identified cleared by acid