நேர்த்திக்கடன் செலுத்த சென்ற  புதுமண தம்பதிக்கு அரங்கேறிய சோகம்.. 11 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தினை சார்ந்த குடும்பத்தினர் புதிதாக திருமணம் முடித்த தம்பதியருடன் கோவிலுக்கு சென்று வர திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டப்படி காரில் ஜோத்புர் நகருக்கு அருகே இருக்கும் பாபா ராம்டியோ கோவிலுக்கு சென்றுள்ளனர். 

இவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டு இருக்கும் போது, கார் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமத்திற்கு அருகே சென்றுள்ளது. இந்த நேரத்தில் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், காரில் பயணம் செய்த அனைவரும் உயிருக்கு போராடி அலறித்துடித்துள்ளனர். இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அப்பகுதி மக்கள் காவல் துறயினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் புதுமண தம்பதிகளான விக்ரம் - சீதா மற்றும் குழந்தைகள் உட்பட உடல் நசுங்கி உயிரிழந்த 11 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Rajasthan Car lorry accident accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->