குடும்பத்தின் வறுமை.. கல்லூரிக்கு பணம்கெட்ட இயலாது தவித்த தந்தை.. விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம் இரண்டாவது குறுக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் மின்துறை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் தேவிஸ்ரீ (வயது 21) என்ற மகள் இருக்கிறார். 

இவர் அங்குள்ள பிச்சைவீரப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 3 ஆம் வருடம் பயின்று வருகிறார். இவர் கல்லூரிக்கு கல்விக்கட்டணம் செலுத்தாது கடந்த ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது தேவிஸ்ரீ தனது தந்தையிடம் கல்விக்கட்டணத்தை செலுத்த கூறி வற்புறுத்தியுள்ளார். இதனை கேட்ட சௌந்தர்ராஜன் பணத்தை விரைவில் செலுத்திவிடுவதாக கூறிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். 

கல்லூரிக்கு செல்ல இயலாத சோகத்தில் தேவிஸ்ரீ இருந்து வந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் தனலட்சுமி உறவினரின் இல்லத்திற்கு சென்றுவிடவே, வீட்டில் தனியாக இருந்த தேவிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய சௌந்தர்ராஜன் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அங்குள்ள கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவர் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படிப்பை தொடர இயலாத மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Puthuchery girl suicide due to did not pay college fees for poor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->