சிகிரெட் வாங்கி தராததால் சிறுவர்கள் செய்த கொடூர காரியம்..! சீரழிந்த இளம் வயதினர்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in Mumbai man killed due to not giving cigarette from shop
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் இருக்கும் பீமபுரி. இந்த நகரில் வசித்து வரும் நபரின் பெயர் ஷியாம் கிசான் (வயது 40). இவர் நேற்று இரவு தனது இல்லத்திற்கு செல்வதற்காக., அங்கிருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில்., இவரை இடைமறித்த நிலையில் இரண்டு வாலிபர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் இடைமறித்து இருந்துள்ளனர். இந்த கும்பலை சார்ந்த ஒருவன்., கிசானிடம் தனக்கு புகையிலை பொருட்களை கடையில் வாங்கி தருமாறு மிரட்டியுள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிசான் சிறுவர்களை எச்சரித்து., வயதால் முதிர்ச்சியடைந்தவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவன்., கிசாமின் கன்னத்தில் ஓங்கி அறைந்த நிலையில்., இளைஞனை கீழே தள்ளியுள்ளார்.
இதனையடுத்து கடும் ஆத்திரத்துக்கு உள்ளான கும்பல்., கிஸானை கடுமையாக தாக்க துவங்கிய நிலையில்., தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கிசானை குத்தியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து கும்பல் தப்பியோடியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த கிஸானின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ததை அடுத்து., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அங்குள்ள போசாரி பகுதியை சார்ந்த ஆகாஷ் கரத் (வயது 22) மற்றும் விஜய் சாவந்த் (வயது 20) மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும்., கைதான சிறுவர்களுக்கு வயது 17 க்கு கீழே உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Mumbai man killed due to not giving cigarette from shop