குப்பைக்கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..! விசாரணையில் பேரதிர்ச்சி தகவல்.. அதிர்ச்சியில் காவல்துறை.!!
in Maharastra girl killed by drama lover police investigation going on
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் கல்யாண் பால்யாணி கிராமத்திற்கு அருகிலிருக்கும் குப்பை கிடங்கில்., கடந்த ஒன்றாம் தேதியன்று பாதி எறிந்த நிலையில் பெண்ணின் உடல் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., எரிந்த நிலையில் இருந்த பெண் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் பகுதியை சார்ந்த மோகினி (வயது 19) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில்.,
பெற்றோரை இழந்திருந்த மோகினி இரண்டு வருடங்களுக்கு முன்னதாக்க மும்பைக்கு வந்த நிலையில்., ஐரோலியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த சமயத்தில்., இவருக்கு கல்யாண் பால்யாணி கிராமத்தை சார்ந்த நீரஜ் மவுரியா என்ற 20 வயதுடைய வாலிபர் முகநூலின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில்., இவர்களின் நட்பானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து தனியாக வீடெடுத்து வசித்து வந்த மோகினியை அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்து வந்த நிலையில்., மோகினி தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தி வந்த நிலையில்., நீரஜ் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., சம்பவத்தன்று மோகினியின் இல்லத்திற்கு சென்ற கொடூரன் அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான்.
இதனால் மோகினி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., கொலையை மறைக்க உடலை பிளாஷ்டிக் பையில் போட்டு குப்பைக்கிடங்கில் வீசிவிட்டு., மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீரஜை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Maharastra girl killed by drama lover police investigation going on