கேரள ஆசிரியை கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரம்... விசாரணையில் பகீர் திருப்பம்.. பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் அங்குள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரூபஸ்ரீ (வயது 44). இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். 

இந்த நிலையில், கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்ததும் தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு சென்று பங்கேற்றுள்ளார். இதற்குப் பிறகு ஆசிரியை ரூபஸ்ரீ வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அங்குள்ள மஞ்சேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். இவரது தலைமுடி அறுக்கப்பட்டு, உடல் இன்னும் பல காயங்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில், இவரது உடலில் காயங்கள் இருப்பதும், இவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தினர். 

இவரை யாரேனும் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என்றும், இவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? எதற்காக தலைமுடியை அறுத்து கொலை செய்தனர்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாயமான போது ரூபஸ்ரீ இரண்டு அலைபேசிகளை வைத்திருந்த நிலையில், அதில் ஒரு அலைபேசியில் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மற்றொரு அலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதன் மூலமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது இரு சக்கர வாகனமும் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், ரூபஸ்ரீ பணியாற்றி வந்த பள்ளியில் இருக்கும் ஓவிய ஆசிரியர் வெங்கட்ரமணா காரம்பர் (வயது 42) என்பவருடன் அடிக்கடி பேசிவந்தது தெரியவந்ததை அடுத்து, வெங்கட்ரமணாவிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை சம்பவம் தெரியவந்துள்ளது. இது குறித்த வாக்குமூலத்தில், ரூபஸ்ரீ - வெங்கட்ரமணா இடையே ஏற்பட்ட பழக்கம் நட்பு ரீதியாக தொடர்ந்து வந்துள்ளது.. இருவரும் ஒரே பள்ளியில் பயணியாற்றியது மற்றும் வீடும் அருகருகே அமைந்தது இவர்களுக்குள் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணம் வாங்கல் - கொடுக்கல் விவகாரமும், தகராறும் இருந்து வந்துள்ளது. 

சம்பவத்தன்று மாலை நேரத்தில் ரூபஸ்ரீ வெங்கட்ரமணாவின் இல்லத்திற்கு சென்றதை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த வெங்கட்ரமணா ரூபஸ்ரீயை கொடூரமாக தாக்கி, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலையை மறைத்து உடலை கடலில் கொண்டு சேர்க்க தனது கார் ஓட்டுநர் நிரஞ்சன்குமார் (வயது 23) என்பவரின் உதவியுடன் அங்குள்ள கடற்கரையில் கொண்டு சென்று உடலை வீசி ஏதும் நடக்காதது போல இருந்துள்ளனர். மேலும், காரின் பின்புறத்தில் இருந்த ஆசிரியையின் தலைமுடி டி.என்.ஏ சோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். 

இந்த நிலையில், பணம் - கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கு ஆசிரியை கொலை செய்யப்பட்டு இருந்தாலும், அவரின் தலைமுடி அறுக்கப்ட்டது எதற்க்காக? அவரின் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணா நிலைக்கு சென்றது அப்படி? இவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பான சந்தேகங்களும் காவல் துறையினருக்கு இருக்கிறது. மேலும், அக்கம் பக்கத்தினர் ஆசிரியையின் உடலை இருவரும் ஏற்றி செல்லும் போது, வெங்கட்ரமணாவின் மனைவி உடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala teacher murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->