இரண்டு வருடங்களுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட 12 வயது சிறுமி.! உடந்தையாக இருந்த பெற்றோர்.. விசாரணையில் பகீர் தகவல்.!!
in kerala girl sexual harassment last two years by 30 members
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை குறைக்க., நமது சட்டங்கள் அதிரடியாக கடுமையாக மாறும் பட்சத்தில்., பெண்களுக்கு எதிரான அநீதிகளில் இருந்து பாதுகாக்க இயலும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வரும் 12 வயதுடைய சிறுமி., அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில்., சிறுமியை அதே பகுதியை சார்ந்தவர்கள்., பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக., பள்ளி நிர்வாகத்தினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர்., குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிச்சியடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாத்தினர்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., சிறுமியை அவரது கிராமத்தினர் பலரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தனக்கு நடந்த துயரங்கள் குறித்து சிறுமி அதிகாரிகளிடம் தெரிவித்து கதறியழுதுள்ளார். மேலும்., சிறுமியை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது சிறுமியை தற்போது வரை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததும்., இந்த விசயத்திற்கு சிறுமியின் பெற்றோர் இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kerala girl sexual harassment last two years by 30 members