ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பித்த 30 பயணிகள்.! வெளியான பேரதிர்ச்சியின் விபத்து தகவல்.!!
in Bangalore bus burned lucky passengers escape by driver
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து அங்குள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூரை நோக்கி., நேற்று முன்தினதன்று இரவில் தனியார் சொகுசு பேருந்தானது புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்குள்ள ஹாசன் சாந்திகிராமம் பகுதியில் பயணம் செய்து கொண்டு இருந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் உள்ள பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இந்த தருணத்தில்., பேருந்தின் எஞ்சினில் இருந்து திடீரென புகையானது வந்துள்ளது. புகையை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர்., சாலையோரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு., பெருந்திற்கு கீழே இறங்கி புகை எங்கிருந்து வருகிறது என்று கண்காணித்துள்ளார்.
இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக எஞ்சின் திடீரெனெ தீப்பற்றி எரிய துவங்கியதை அடுத்து., முழித்துக்கொண்டு இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். மேலும்., பிற பயணிகளையும் உஷார் படுத்தி அனைவரும் இறங்கிய நிலையில்., பேருந்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவ துவங்கியது.
இதனைத்தொடர்ந்து இது குறித்து அங்குள்ள தீயணைப்பு படையினருக்கு பேருந்தின் ஓட்டுநர் தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தீயினை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால்., இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடுகளாக காட்சியளித்தது.
மேலும்., பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சுமார் 30 பயணிகள் தப்பித்ததை அடுத்து., மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து., தீ முழுவதுமாக எரிந்து அணைந்ததும் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் பேருந்தை சாலையோரத்திற்கு கொண்டு சென்று., போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Bangalore bus burned lucky passengers escape by driver