ஒரு தலைக்காதலால் பெண்ணை பேய் போல படுத்திய கொடூரன்.. நிர்வாணமாக்கி ஓடவிட்டு அடித்த கிராம மக்கள்... சிறப்பான தரமான சம்பவங்கள்..!!
in amirthasaras villagers attack men one side love torture
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இருக்கும் குர்வாலி கிராமத்தை சார்ந்தவர் வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அங்குள்ள சத்தியின்ட் கிராமத்தில் பெண்ணொருவர் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்.., வாலிபருக்கு - பக்கத்து கிராம பெண்மணியை கண்டவுடன் காதலில் விழுந்துள்ள நிலையில்., பெண்ணை காணும் இடத்தில் காதல் பார்வையினை செலுத்தி பெண்ணை காதல் வலையில் விழ வைக்க முயற்சித்துள்ளார்.
மேலும்., இவரை அந்த பெண்மணி ஏலெடுத்து கூட பார்க்காத நிலையில்., கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தனது காதல் தொல்லை வழங்கி வந்துள்ளான். வாலிபனின் காதல் மயக்கத்தை பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நோட்டமிட்டுள்ளனர்.
ஒரு தலைகாதலில் கிரங்கியிருந்த கொடூரன் ஒரு சமயத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்., பெண்ணை பேச வைக்க அவனின் அலைபேசி எண்ணை காகிதத்தில் எழுதி பெண்ணின் மீது தூக்கியெறிந்துள்ளான்.
இதனால் பதறிப்போன பெண்மணி அலறவே அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி இளைஞரை புரட்டி எடுத்தனர். இதனையடுத்து பெண்ணிடம் மன்னிப்பு கேட்க சொல்லி உறவினர்கள் வற்புறுத்திய நிலையில்., மன்னிப்பு கேட்டுள்ளார்..
ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் அனைவரும் அவனின் ஆடையை உருவி நிர்வாணமாக்கி நையப்புடைத்து இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விடியோவானது இணையத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து., காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in amirthasaras villagers attack men one side love torture