மனைவிக்கு ஒழுங்காக புடவைகட்ட தெரியவில்லை.. கணவன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மனைவிக்கு ஒழுங்காக புடவைகட்ட தெரியவில்லை என கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம் முகுந்த்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமாதான் சாப்ளே. இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், தனது மனைவிக்கு ஒழுங்காக  புடவைகட்ட தெரியவில்லை எனவும் சரியாக பேசதெரியவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமாதான் 3 வ்சாப்ளேவை விட அவரது மனைவிக்கு 3வயது அதிகம் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband Committed Suicide In Maharasstira


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->