தனது மாநிலங்களவை உறுப்பினர் சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப் போவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் சம்பள தொகையை விவசாயிகளின் பெண் குழந்தைகளுடைய கல்வி செலவிற்கு பயன்படுத்தப்போவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சி அமைத்ததை அடுத்து ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில், தனது மாநிலங்களவை உறுப்பினர் சம்பளத்தை விவாசயிகளுடைய பெண்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்போவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbhajan Singh gives his salary to farmers family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->