டெல்லி || பள்ளி மாணவனை ரவுண்டு கட்டி தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவனை ரவுண்டு கட்டி தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள் - நடந்தது என்ன?

நாட்டின் தலைநகரான டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவரை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தற்காக சுபம் ராவத் என்ற ஆசிரியர் தாக்கியுள்ளார். 

அந்த மாணவன் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் ஆசிரியர் ராவத் அந்த மாணவனை தனி அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு மேலும் சில ஆசிரியர்களுடன் சேர்ந்து வகுப்பறையைப் பூட்டிவிட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும், அந்த மாணவனை வகுப்பறைக்கு வெளியே வீசி, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் படிக்க விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த மாணவன் உடலில் காயங்களுடன் வீட்டிற்குச் சென்றதை பார்த்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர் வகுப்பறையில் நடந்த விஷயங்களை அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ராவத், அனுபம், எஸ்.எஸ்.பாண்டே மற்றும் நிஷாந்த் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளி மாணவனை ஆசிரியர்கள் அடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school teachers attack school student in delhi yamuna vihar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->