நொய்டாவில் அதிரடி என்கவுண்டர்.! பிரபல தாதா சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


நொய்டாவில் நடந்த அதிரடி என்கவுண்டரில் பிரபல தாதா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஐந்து கொலை மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா கிராபால் என்ற பெயரால் அழைக்கப்பட்ட கபில்(33) என்பவரை பல வருடங்களாக போலீசார் தேடி வந்தனர். மேலும் இவர் பாக்பத், முசாபர்நகர் மற்றும் புலந்த்ஷாஹர் மாவட்டங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கிரேட்டர் நொய்டாவில் கபில் பதுங்கியிருப்பதை அறிந்த நொய்டா காவல்துறை, சிறப்பு அதிரடிப் படை கூட்டுக் குழுவுடன் இணைந்து அதிரடி என்கவுண்டர் நடத்தியது. இதில் பல ஆண்டுகளாக திகிடப்பட்டு வந்த கபில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் இதுகுறித்து மீரட் மண்டலnகாவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் நாராயண் கூறுகையில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஒரு கூட்டாளியுடன் ரவுடிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் இந்த என்கவுண்டர் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gangster killed in encounter in Noida uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->