பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி; 30 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கோகர்ணா நகரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து இன்று காலையில் ஹோலாலகரே நகரின் அருகே வந்து கொண்டிருந்த போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹோலாலகரே தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died and thirty peoples injured for accident in karnataga


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->