அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசாமில் 7.11 லட்சம் பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிப்பு அடைந்துள்ளனர். சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையாக வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாகன் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 282 தற்காலிக முகாம்களில் 74 பேர் ஆயிரம் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood death increased in assam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->