தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - திட்டமிட்ட சதியா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் அன்கூரா என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் பற்றிய இந்தத் தீ மளமளவென அடுத்தடுத்து வேகமாக பரவியது. 

இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து ஓடினர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடிய பிறகு தீ அணைக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in telangana private hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->