மும்பை || அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - பொதுமக்களின் கதி என்ன?
fire accident at apartment in mumbai
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே கல்யாண் மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின், வேகத்தின் காரணமாக கட்டிடத்தின் 18-வது மாடி வரை தீ வேகமாக பரவியது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இருப்பினும், இந்தக் கட்டிடம், இன்னும் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத நிலையில், அதன் முதல் மூன்று தளங்களில் மட்டும் சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident at apartment in mumbai