கோர விபத்து! லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல்! 6 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டு புரத்தை சேர்ந்தவர்கள் 8 பேர், காரில் சென்று நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர்.

இதில் நேற்று, தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு திருப்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.

இவ்விபத்தில் காரிலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவலர்கள் இது குறித்து  வழக்கு பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fatal accident Car collides head on with lorry 6 people killed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->