மணிப்பூரில் திடிரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
Earthquake in Manipur 3.3 rictor measurement
மணிப்பூர் மாநிலம் தௌபாலில் நேற்று இரவு 11.41 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தௌபால் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று இரவு 11.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது தரையில் இருந்து இருந்து 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்து தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
English Summary
Earthquake in Manipur 3.3 rictor measurement