இந்தியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு!
earthquake in Delhi Punjab
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஜம்முவில் இன்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் உத்தரகாண்ட் மற்றும் நொய்டா பகுதியிலும் எதிரொலித்து உள்ளது. வீடுகளில் இருந்த மக்கள் வீதிகளில் வந்து விட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்று இரவு 10.34 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல், மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் இரவு 10.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்க கூடாது என பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
English Summary
earthquake in Delhi Punjab