மதுபோதையில் நடந்த விபரீதம் - தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுதியானா பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திச் சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உடனடியாக அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

இதனை கண்ட உடனே சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட், ரெயிலின் வேகத்தை குறைத்து பெரும் விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இருந்து லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிலமணி நேரத்திற்கு பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அதில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைதுசெய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver arrested for land lorry in railway track


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->