கவலை வேண்டாம் மக்களே! கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் உள்ளது...! -ஹர்தீப் சிங் புரி - Seithipunal
Seithipunal


ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் மோதல் ஒருவரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. மக்களிடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை எகிறும் என்ற கவலை நிலவுகிறது.

ஹர்தீப் சிங் புரி:

இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா? என்ற கேள்விக்கு, மத்திய மந்திரி 'ஹர்தீப் சிங் புரி' பதிலளித்ததாவது,"கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர் தாண்டுமோ? என கவலை எழுந்தது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்"என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont worry people Crude oil prices are under control Hardeep Singh Puri


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->