மீண்டும் மீண்டுமா? ஏர் இந்தியா விமானங்களுக்கு என்னதான் ஆச்சு..! பறவை மோதலால் விமானம் ரத்து..!
Air India flight cancelled due to bird Clash
கடந்த 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்தவர்கள் 241 பேர் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்வபம் நாட்டை உலுக்கியுள்ளநிலையில், ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்று புனேவில் இருந்து டில்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானங்களை சோதனை செய்ய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இயந்திர கோளாறு , பார்வையை மோதல் போன்ற காரணங்களினால் ஏர் இந்தியாவின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனே நகருக்கு ஏர் இந்தியாவின் AI 2470 விமானம் இன்று வந்துள்ளது. குறித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் அதில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் மீண்டும் புனேயில் இருந்து டில்லி செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத்தை ஏர் இந்தியா பொறியாளர்கள் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து டில்லி செல்ல வேண்டிய பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப டிக்கெட் ரத்து அல்லது வேறு நாளில் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Air India flight cancelled due to bird Clash