#BREAKING : தலைநகர் டெல்லியில் 21 வயது தமிழக இளம்பெண் மர்ம மரணம்.! தமிழர்கள் போராட்டம்.!
delhi JalVihar Lakshmi DEATH
தலைநகர் டெல்லியின் ஜல்விஹார் பகுதியில் லட்சுமி என்ற தமிழகத்தில் 21 வயது பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
ஜல்விஹார் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வேலை செய்துவந்த லட்சுமி, வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது டெல்லி வாழ் தமிழர்களை அதிர வைத்துள்ளது.
இந்த மர்ம மரணம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (வயது 21) ஜல்விஹார் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இன்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், எட்டு மணிக்கு தனது சகோதரிக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து அழுதுகொண்டே பேசி இருக்கிறார். இதனையடுத்து லட்சுமியின் தாய் நேரடியாக சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர், 'உங்கள் மக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, உயிர் இழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளோம். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் உயிரிழந்த தமிழ் பெண் லட்சுமிகாக தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இளம்பெண் மரணம் மர்ம மரணம் குறித்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
delhi JalVihar Lakshmi DEATH