9 மணி நேரம்! அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ நடத்திய விசாரணை சற்றுமுன் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. 

இதையடுத்து 849 தனியார் நிறுவனங்களுக்கு உரிமைத்தொகை 144 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. 

ஆனால், இந்த புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மதுபான வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

பின்னர் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. 

அதன்படி, சிபிஐ முன் இன்று காலை சுமார் 11 மணி அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில், சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Arvind Kejriwal CBI office liquor policy case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->