கேரள குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு.!
death troll increased kerala bomb blast
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பதினெட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே இந்தக் குண்டு வெடிப்புக்கு நான் தான் காரணம் என்று மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரி என்பவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
English Summary
death troll increased kerala bomb blast