வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு..!! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணியில் மத்திய நிதி அமைச்சகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி குறித்து முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வருமான வரி விளக்கு உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சாமானியர்களும் நடுத்தர மக்களும் பயன் அடைவார்கள். மேலும் வருமான வரி செலுத்துவதற்கு ஆயுள் காப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலக்கின் அளவு அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt decides to increase income tax exemption ceiling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->