உத்திரபிரதேசத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் லக்னோ ஆக்ரா விரைவு சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பீகாரில் இருந்து இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து ஒன்று சுமார் 80 முதல் 85 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருக்கும்போது உத்திரபிரதேசம் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணியினர், படுகாயம் அடைந்த 25 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus accident in uttarpradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->