கட்டணம் கேட்டதால் ஆத்திரம்... சுங்கச் சாவடியை இடித்து தரைமட்டமாக்கிய ஓட்டுநர்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் புல்டோசர் ஓட்டுனரிடம் சுங்கச்சாவடி அதிகாரிகள் கட்டணம் கேட்டதால் இடித்து தரமட்டமாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லி - லக்னெள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹாபூர் சுங்கச்சாவடி வழியாக இன்று காலை புல்டோசர் வாகனம் சென்றுள்ளது. புல்டோசர் ஓட்டுனரிடம் சுங்கச்சாவடியை கடக்க கட்டணம் கேட்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் சுங்கச்சாவடியை புல்டோசரை கொண்டு இடித்து தரமாட்டமாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தில் வாகனங்கள் செல்லும் இரண்டு வழித்தடங்கள் முற்றிலுமாக செய்தமடைந்ததால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஓட்டுனரை தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bulldozer driver demolished tollbooth


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->