இன்று காலை திருமணம்.. இரவு மணமகள் எடுத்த விபரீத முடிவு.! தெலுங்கானாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், நயிம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவளி (22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் இந்த திருமணத்தில் ரவளிக்கு விருப்பம் இல்லாததால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்துதனர். இந்நிலையில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்க இருந்தநிலையில், நள்ளிரவு 12 மணியளவில் ரவளி மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு சென்ற மகள் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தநிலையில் கதறி அழுதனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரவளியின் புடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரவளியின் விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடு செய்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bride committed suicide while the wedding was about today in Telangana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->