சோகம்... வீட்டில் திடீர் தீ விபத்து - சிறுவன் பலி.!!
boy died for fire accident in maharastira
மஹாராஷ்டிரா மாநிலம் கசாராவில் உள்ள வாஷாலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தத்தா பூலே என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்ற சில உள்ளூர் சிறுவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அறை ஒன்றில் சிறுவன் ஒருவன் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy died for fire accident in maharastira