சாலையில் கேட்பாற்று கிடந்த பையில் வெடிகுண்டு.. டெல்லியில் பரபரப்பு..!
Bomb discovery in Delhi
சாலையில் கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பையை ஆய்வு செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து , வெடிகுண்டு நிபுணர்கள் வரவழிக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேட்பாற்ற கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.