குண்டு வெடிப்பால் குலுங்கிய இஸ்ரேல் தூதரகம் - தீவிர விசாரணையில் டெல்லி போலீசார்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரக அலுவலகத்தின் அருகே நேற்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டெல்லி போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்தத் தகவலின் படி போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கு சோதனை செய்ததில், இஸ்ரேல் தூதருக்கான மிரட்டல் கடிதம் ஒன்றையும் டெல்லி போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அளவில் சிறிய குண்டு வெடித்ததை உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:- "இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தூதரக அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எவரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்கவும் இஸ்ரேல் தூதரகம் தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb blast in isrel embassy delhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->