இந்து விரோத சிந்தனை கொண்ட கட்சி இதுதான்: பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது. அப்போது ராகுல் காந்தி பேசியிருப்பதாவது, 

நாங்கள் தனி ஒரு நபரான மோடி அல்லது பா.ஜ.கவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி வாக்கு பதிவு இயந்திரம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, போன்ற அமைப்புகள் வசம் உள்ளது என தெரிவித்தார். 

இந்நிலையில் பா.ஜ.க எம்.பி ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நேற்று ராகுல் காந்தி கலாச்சாரத்தை அவமதித்தார். அவர் தன் தவறை உணர்ந்து கொள்வார் என நினைத்தோம். 

ஒரு நாள் ஆன பிறகும் அந்த அறிக்கையை சரி செய்யும் முயற்சியில் இல்லை. கூட்டணி கட்சியினர் அவரது கருத்துக்கு அர்த்தத்தை தேடி நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். 

ராகுல் காந்தியின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களை கொண்ட காங்கிரஸ் கட்சியாக இல்லை. 

பிரிவினை மனப்பான்மையையும் மாவோயிஸ்ட் சிந்தனையும் இந்து விரோத சிந்தனையும் காங்கிரஸ் கட்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp MP Ravi Shankar Prasad speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->