பீகார் || ஆற்றில் கவிழ்ந்த படகு.! 7 பேர் உயிரிழப்பு..!
bihar boat overturned river seven peoples died
பீகார் மாநிலத்தில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கங்கை ஆற்றில் படகு ஒன்று விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று பேர் தண்ணீரில் நீந்திச் சென்று உயிர் தப்பினர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இரவு முழுவதும் நடத்திய தேடுதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
bihar boat overturned river seven peoples died