விமான நிலைய கழிவறையில் பணப்பையை தவறவிட்ட பெண்! ட்விட்டரில் நன்றி பதிவு! - Seithipunal
Seithipunal


விமான பயணத்தின் போது பணப்பை, சாவி போன்ற முக்கியமான பொருட்களை தவறவிட்டால் பயணிகள் மிகவும் வருத்தம் அடைவார்கள். 

இது போன்ற சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. மேக்னா கிரிஷ் என்பவர் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற போது அவரது கைப்பை, பணப்பை, சாவி மற்றும் சில முக்கிய பொருட்களை மறந்து வைத்து சென்றுள்ளார். 

பின்னர் அவர் தனது பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது, அதனை கழிப்பறையில் மறந்து விட்டு விட்டதை அறிந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் விமான நிலைய ஊழியர்களை உடனடியாக தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.  

இதன் மூலம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிவறையில் சென்று தேடி பார்த்த போது அந்த பெண்ணின் பணப்பை உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். 

உரிய அடையாளம் காண்பித்ததன் பிறகு அவருடைய பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவர் தொலைத்த பையை மீண்டும் 10 நிமிடங்களில் கிடைத்துவிட்டது. 

இதற்காக அவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து பலர் பல்வேறு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru airport woman missing money bag


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->