பள்ளியின் 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பலி: தந்தை பரபரப்பு தகவல்!
Bangalore girl fell down 3rd floor died
பெங்களூருவில் பள்ளியின் மூன்றாவது தளத்திலிருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, செல்லகெரே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி படித்து வந்த 4 வயது சிறுமி, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டார்.
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதனை அடுத்து ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிலிருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு சிறுமியின் தந்தை, பள்ளியின் அலட்சியமே குழந்தை இறப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி மற்றும் முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bangalore girl fell down 3rd floor died