அயோத்தி ராமர் கோவில்.. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப் பணியை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 3வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவசரி மகாராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, ராமர் கோயில் கட்டும் பணியில் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 ராமர் கோயில் கட்டுவதற்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறப்பு என்பது, மத்தியில் ஆளும் பாஜகவிற்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayothi ramar temple open on 2024 January


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->