12 வயது சிறுமி 7 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கொலை..! பெரும் சோகம்... பதற்றம்.!!
assam child sexual abuse killed
அசாம் மாநிலத்தின் பிஷ்வானத் மாவட்டம் சக்லா கிராமத்தில் சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு வயது 12. இவர் கடந்த சனிக்கிழமை காலை அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய படி சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையள், சந்தேகத்தின் பேரில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 7 மாணவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில், சிறுமியை வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி உண்மையை கூறிவிடுவார் என்ற பயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமியை கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை போல ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
assam child sexual abuse killed